ஏமன் நாட்டில் கூட்ட நெரிசலில் 51 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

இப்:

ஏமன் நாட்டில் தேர்தல் கூட்ட நெரிசலில் சிக்கி 51 பேர் பலியாயினர். 238 பேர் படுகாயமடைந்தனர்.

ஏமன் நாட்டின் இப் என்ற நகரில் தேர்தலையொட்டி பிரமாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அங்குள்ள ஸ்டேடியத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜனாதிபதி அலி அப்துல்லா சலே இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசி முடித்து விட்டு சென்றவுடன் ஸ்டேடியத்தில் கூடியிருந்தவர்கள் வேக வேகமாக வெளியேறினர்.அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெரும் அமளி துமளி நிலவியது.

இதில் நெரிசலில் சிக்கி மிதிபட்டு 51 பேர் பரிதாபமாக இறந்தனர். 238 பேர் படுகாயமடைந்தனர். ஸ்டேடியத்தில்கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் கூடியதே இந்த நெரிசலுக்கு முக்கிய காரணம். மொததம் 1,50,000 பேர்ஸ்டேடியத்தின் உள்ளேயும், வெளியேயும் கூடியிருந்தனர். இதுதவிர ஸ்டேடியத்தை சுற்றியுள்ள தெருக்களிலும்பெருமளவு மக்கள் கூடியிருந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுககு கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்கள் குடும்பம் மற்றும்காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு தரப்படும் என ஜனாதிபதி சலே அறிவித்துள்ளார். அவர்களுக்குமாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 20ம் தேதி ஏமன் நாட்டில் ஜனாதிபதி மற்றும் ஊராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.மிகவும் ஏழை நாடான ஏமனில் சலேதான் நீண்ட காலமாக ஜனாதிபதியாக இருந்து வருகிறார். வரும் தேர்தலிலும்அவரே வெற்றிபெறுவார் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+