எஸ்வி.சண்முகம்-அதிமுகவின் செருப்பு போராட்டம்
மதுரை:
அமைச்சர் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசிய அதிமுக எம்.எல்.ஏ.எஸ்.வி.சண்முகத்தைக் கண்டித்து மதுரையில் அவரது அலுவலகம் முன்பு துடைப்பம்,செருப்புகளுன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் அலுவலகத்திற்குள்ளும் நுழைய முயன்றனர். இதையடுத்து 20 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் சமீபத்தில் அரசுவிழாவில் திடீரென கலந்து கொண்டு அமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.
அவரது இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய அடுத்த நாளே சண்முகத்தை, மாநில ஜெ. பேரவைசெயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.
![]() |
கட்சியை விட்டு கட்டம் கட்டினால் எம்எல்ஏ பதவியோடு திமுகவில் ஐக்கியமாகவசதியாகப் போய்விடும் என்பதால் அவரை விட்டு வைத்துள்ளார் ஜெயலலிதா.
இந் நிலையில், சண்முகத்தின் அலுவலகத்திற்கு இன்று மாநகர அதிமுக செயலாளர்ராஜன் செல்லப்பா தலைமையில், தொண்டர்கள் திரண்டு வந்தனர். பெண்கள் கையில்துடைப்பம், செருப்புகளுடன் வந்தனர்.
சண்கத்தை கெட்ட வார்த்தைகளால் திட்டி கோஷமிட்ட அவர்கள் அலுவலகத்திற்குள்நுழைய முயன்றனர்.
அவர்களை போலீஸார் தடுக்க முயன்றனர். ஆனாலும் போலீஸாரை தள்ளி விடடுவிட்டு உள்ளே நுழைய அதிமுகவினர் யன்றனர். இதனால் அங்கு பெரும்தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் போலீஸார் அதிமுகவினர் 20 பேரை கைது செய்து அங்கிருந்துஅப்புறப்படுத்தினர்.













Click it and Unblock the Notifications