ஹோட்டல்: காளிமுத்து மீது 2 வழக்குகள் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபை விடுதி உணவகத்திற்கு காண்டிராக்ட் விட்டதில்முன்னாள் சபாநாயகர் காளிமுத்து ஊழல் செய்துதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனார்.

சென்னை இரண்டு உணவகங்களுக்கு காண்டிராக்டை நீடிப்பது தொடர்பாக காளிமுத்து முறைகேடுசெய்துள்ளதாக முதல்வர் கருணாநிதி சட்டசபையில் புகார் கூறினார்.

இதுதொடர்பான ஆதாரங்களையும் சபாநாயகரிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் புகார்கள் தொடர்பாககாளிமுத்து மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 120 பி, 13(2), 13(1) ஆகியபிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளதாவது:

அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா உணவகத்தை காளிமுத்து 27.3.2002ல் ரூ.2,750க்கு வாடகைக்கு விடஅனுமதித்துள்ளார். இது முந்தைய வாடகையைவிட குறைவான வாடகையாகும். இதனால் அரசுக்கு ரூ. 10லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வழக்கில் காளிமுத்து, ஹோட்டல் உரிமையாளர் கே.வி.ஆர்.மணி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதே போல அரசினர் தோட்டத்தில் உள்ள அன்பகம் என்ற இன்னொரு உணவகத்துக்கும் வாடகைக்குவிடப்பட்டதில் காளிமுத்துவும், ஹோட்டல் உரிமையாளர் ஹனீபா ஆகியோர் மீது வழக்குப்பதிவுசெய்யப்படுகிறது. இந்த உணவகத்தினை 5.8.2002ல் 4 வருடத்துக்கு காளிமுத்து வாடகைக்கு விட்டார்.

டெண்டர் விதிமுறைகளை பின்பற்றாமல் தனது இஷ்டத்துக்கு மாதம் ரூ. 5,000 வாடகைக்கு விட்டுள்ளார். இதன்மூலம் அரசுக்கு வருடத்துக்கு ரூ. 60,000 தான் வாடகை வந்துள்ளது. ஆனால் அதற்கு முன்தைய வருடங்களில்ஆண்டுக்கு ரூ. 11.5 லட்சம் வாடகை வந்தது. வாடகை குறைப்பு மூலம் 4 வருடத்தில் அரசுக்கு ரூ. 43 லட்சம்நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+