25ம் தேதி முதல் திருப்பதியில் பிரமோற்சவம்
திருப்பதி:
திருப்பதியில் வரும் 25ம் தேதி பிரமோற்சவ விழா தொடங்குகிறது.
25ம் தேதி இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெறும். 26ம் தேதி காலை சின்னவாகனத்திலும், அன்று இரவு அன்ன வாகனத்திலும் சுவாமி வலம் வருவார்.27ம் தேதி காலை சிங்க வானகத்திலும், அன்று இரவு முத்து பந்தல் வாகனத்திலும், 28ம் தேதி காலை கல்விவிருட்ச வாகனத்திலும், அன்று இரவு சர்வ பூவை வாகனத்திலும் ஏழுமலையான் சுவாமி ஊர்வலம் நடைபெறும்.
29ம் தேதி காலை மோகனி அவதார வாகனத்திலும், அன்று இரவு கருட வாகனத்திலும், 30ம் தேதி காலைஅனுமன் வாகனத்திலும், மாலை தங்க ரதத்திலும், இரவு கஜ வாகனத்திலும் சுவாமி ஊர்வலம் நடைபெறவுள்ளது.
அக்டோபர் 1ம் தேதி காலை சூரிய பிரபா வாகனத்திலும், அன்று இரவு சந்திர பிரபா வாகனத்திலும், 2ம் தேதிகாலை ரத ஊர்வலத்திலும், அன்று இரவு குதிரை வாகனத்திலும் ஊர்வலம் நடக்கும்.
3ம் தேதி பல்லக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை சகஸ்ரநாமம், இரவு துவஜ ஆரோகனாநிகழ்ச்சிகள் நடைபெறும். பிரமோற்சவத்தையொட்டி 19ம் தேதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனசேவை நடைபெறுகிறது.
பிரமோற்சவ நிகழ்ச்சியையொட்டி 25ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை வழக்கமாக நடைபெறும் தினசரிசேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
விழா நடைபெறும் ஆர்ஜித் பிரமோற்ச சேவைக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்தசேவைக்கு ரூ. 100 கட்டணம் செலுத்தினால் 5 பேர் அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தாம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications