அய்யோ.. நான் அப்படி சொல்லலை: கார்த்திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா மன்னிப்பு கேட்டால்தான் அதிமுகவுடன் கூட்டணி வைப்பேன் என்றுநான் சொல்லவே இல்லை. அப்படி நான் கூறியதாக வெளியான அறிக்கையை நான்வெளியிடவே இல்லை என்று நடிகர் கார்த்திக் திடீரென மறுத்துள்ளார்.

இதனால் அவர் மிரட்டப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் பத்திரிக்கையாளர்கள்மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பார்வர்ட் பிளாக் தலைவரான நடிகர் கார்த்திக் பெயரில் சமீபத்தில் ஒரு அறிக்கைவெளியானது. அவரது அலுவலக பேக்சில் இருந்து அவரது லெட்டர் பேடிலேயேஅந்த அறிக்கை வந்தது.

அதில், கடந்த காலங்களில் தான் செய்த தவறுக்கு ஜெயலலிதா மன்னிப்பு கேட்கவேண்டும். போயஸ் தோட்டத்தில் எனக்கும், அகில இந்திய பொதுச் செயலாளர்பிஸ்வாஸுக்கும் நடந்த அவமானத்தை நான் இன்னும் மறக்கவில்லை.

எனவே அவர் மன்னிப்பு கேட்டால்தான் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன்,பார்வர்ட் பிளாக் கூட்டணி வைக்கும் என கார்த்திக் கூறியிருந்தார்.

ஆனால் இந்த அறிக்கையை இப்போது அவர் மறுத்துள்ளார். செய்தியாளர்களைசந்தித்த கார்த்திக் கூறுகையில்,

ஜெயலலிதா என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நான் கூறியதாக எனதுபெயரில் அறிக்கை வெளியாகியுள்ளது. உண்மையில் அந்த அறிக்கையை நான்வெளியிடவில்லை.

அந்த அறிக்கையை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். நானோ எனதுஅலுவலகத்திலிருந்தோ இதை யாரும் கொடுக்கவில்லை. இது ஒரு பொறுப்பற்றஅறிக்கை. இதை நான் கொடுக்கவில்லை என்று உறுதியாக கூறுகிறேன்.

எனது தொழில் மீது ஆணையாக இந்த அறிக்கையை நான் கொடுக்கவில்லை. எனதுபெயரை பயன்படுத்தி யாரோ தவறாக இப்படி ஒரு அறிக்கையைவெளியிட்டுள்ளனர். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக (என்னாது??) யாரோமோசடி செய்து எனது பெயரில் அறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

இது மிகவும் தவறான, பொறுப்பில்லாத, மோசடி செயலாகும். இந்த தவறைசெய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மீது போலீஸில்புகார் கொடுக்கவுள்ளேன்.

எனது பேக்ஸ் எண்ணிலிருந்து இது கொடுக்கப்பட்டுள்ளதால் உரிய முறையில்விசாரணை நடத்த போலீஸை கோரவுள்ளேன்.

மிகப் பெரிய இயக்கத்தின் மதிக்கப்படக் கூடிய தலைவர் ஜெயலலிதா. அவரைமன்னிப்பு கேட்கச் சொல்ல நான் யார்? நான் அனைத்துத் தலைவர்களையும்மதிக்கிறேன். இதுபோன்ற வார்த்தைகளை நான் ஒருபோதும் பயன்படுத்துவதில்லை.எல்லோரும் எனக்கு வேண்டும். யாரையும் நான் எதிரியாக நினைத்ததில்லை.

விரைவில் யார் இந்த தவறை செய்தது என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துவேன்.இந்த அறிக்கை வெளியான பின்னர் அதிமுகவிலிருந்து யாரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. நான்தான் எனது கட்சியினரிடம் இதுகுறித்து விசாரித்தேன்.

இதையெல்லாம் பார்க்கும்போது அரசியலை விட்டே போய் விடலாமா என்று கூடத்தோன்றுகிறது. ஒரு சிலர் இப்படி இருப்பதால் பெரும்பாலான மக்களை கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காக பொறுத்துக் கொள்கிறேன்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வருமா என்பது குறித்து கூறமுடியாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். விரைவில் கட்சியின் மாநில குழுக்கூட்டம் மதுரையில் கூடுகிறது. அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்கார்த்திக்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+