இலங்கை-அம்பாரையில் 11 முஸ்லீம்கள் படுகொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் கிழக்கு அம்பாரை மாவட்டத்தில் 11 முஸ்லீம் தொழிலாளர்கள்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு அம்பாரை மாவட்டத்தில் உள்ள பொட்டுவில் என்ற இடத்தில் சாலைமேம்பாட்டுப் பணியில் சில முஸ்லீம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். வேலையைமுடித்து விட்டு டிராக்டர் ஒன்றில் அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது அவர்களை வழிமறித்த சிலர் சரமாரியாக வெட்டினர். இதில் 11தொழிலாளர்கள் பலியாயினர். கொல்லப்பட்டவர்களில் 10 பேரின் உடல்கள் அருகில்உள்ள வனப் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்கள் பொட்டுவில்லில் உள்ள மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த படுகொலைக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால்விடுதலைப் புலிகள்தான் காரணமாக இருக்க முடியும் என பொட்டுவில் முஸ்லீம்கள்புகார் கூறுகின்றனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படவில்லை.












Click it and Unblock the Notifications