இன்று தலைமை செயலாளரின் மெகா பிரஸ் மீட்!
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரிபாதி தலைமையில் 38 துறைச்செயலாளர்கள் கலந்து கொள்ளும் மெகா பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மாலைநடைபெறுகிறது.
தமிழக அரசு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதல் முறையாக தலைமைச்செயலாளர், 38 துறைச் செயலாளர்கள் கலந்து கொள்ளும் மெகா பத்திரிக்கையாளர்சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ாஜாஜி அரங்கத்தின் மாநாட்டு அரங்கில் நடைபெறும் இந்த பத்திரிக்கையாளர்சந்திப்பின்போது கடந்த 120 நாட்களில் திமுக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள்,நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்துவிளக்கப்படுகிறது.
அரசின் செயல்பாடுகள் குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கும் தலைமைச்செயலாளர் பதிலளிக்கிறார்.
மேலும் ஒவ்வொரு துறை சார்பிலும் செய்தி அறிக்கைகளும் பத்திரிக்கைகளுக்குவழங்கப்படவுள்ளது.
இதுவரை இப்படி ஒரு மிகப் பெரிய பத்திரிக்கையாளர் சந்திப்பு தமிழகத்தில்நடைபெற்றதில்லை. மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித்தேர்தல் ஆகியவை நடைபெறவுள்ள நிலையில் அரசின் திட்டங்கள் குறித்த மிகப்பெரிய பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications