இந்து மத மறுமலர்ச்சி-ஜெயேந்திரர் அழைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்து சமய மறுமலர்ச்சிக்காக இந்துக்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் என காஞ்சி சங்கராச்சாரியார்ஜெயேந்திரர் கூறியுள்ளார்.

முற்றுகையில் இந்துக்கள்:

மீளும் வழி என்ற தலைப்பில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமிஎழுதியுள்ள நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனன், காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஜெயேந்திரர் பேசுகையில், இந்துக்களின் இன்றைய நிலை இந்த நூலில் தெளிவாகவிவரிக்கப்பட்டுள்ளது. பிரிந்து கிடக்கும் இந்துக்களை இணைக்கும் ஒரே வழி இந்து சமயத்தில் மறுமலர்ச்சியைஏற்படுத்துவது மட்டும் தான்.

இந்து மதத்தில் மறுமலர்ச்சி ஏற்பட இந்துக்கள் இணைந்து பாடுபட வேண்டும். தீவிரமாக உழைக்க வேண்டும்.இந்துக்களை ஒருங்கிணைத்து இந்து மதத்தை உயர்த்தும் நோக்கில் தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்புஉருவாக்கப்பட்டது.

இந்த நோக்கில் சங் பரிவார் குடும்பத்தைச் சேர்ந்த 30 முதல் 40 அமைப்புகள் இந்த லட்சியத்தை அடையும்நோக்கில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இது போதுமானதாக இல்லை. பிரிந்து கிடக்கும் ஏராளமான இந்துமக்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

Jeyandrar in Delhi

கோவில்களுக்குப் போவதாலும், கடவுள்களை வழிபடுவதாலும், பூஜைகளை நடத்துவதாலும் மட்டும் இந்துமதத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி விட முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.

இந்தியாவில் வெளிநாட்டினரின் ஊடுறுவலுக்குப் பிறகு இந்து மதம் கோமா நிலையை அடைந்து விட்டது. அதைதட்டி எழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார் ஜெயேந்திரர்.

நூலை ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனன் வெளியிட அதை ஜெயேந்திரர் பெற்றுக் கொண்டார். முன்னாள் மத்தியஅமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, அருண் ஷோரி, மேனகா காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+