கோவில் விழாவில் ரவுடிக்கு வெட்டு
சென்னை:
சென்னை அருகே கோவில் திருவிழாவின் போது ரவுடி ஒருவரை இன்னொரு கோஷ்டி சூழ்ந்து கொண்டுசரமாரியாக வெட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் சிதறி ஓடினர்.
சென்னை திருவொற்றியூர் பூங்காவன புரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது தம்பி தேவன். இருவரும்அப்பகுதியில் பிரபலமான ரவுடிகளாம். ராமமூர்த்தி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடையமனைவி மங்கை. இவருக்கு சேர வேண்டிய சொத்தைப் பிரித்து தர தேவன் மறுத்து விட்டதாக தெரிகிறது.இதுதொடர்பாக தேவனிடம் பலமுறை மங்கை கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் கொடுப்பதாக தெரியவில்லை.இதனால் ஆத்திரமடைந்த மங்கை, தேவனை தீர்த்துக் கட்டுமாறு தனது மருமகன் கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பூங்காவனபுரத்தில் பெரியபாளையத்தம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதுதொடர்பாகஇன்னிசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைக் காண தேவன் தனது ஆட்களுடன் வந்திருந்தார்.
இதை அறிந்த கார்த்திக் தனது ஆதரவாளர்கள் நான்கு பேருடன் அங்கு வந்தார். தேவனிடம் வாக்குவாதத்தில்ஈடுபட்டார். அது சண்டையாக மாறியது. கார்த்திக்குடன் வந்தவர்கள் தேவனை சூழ்ந்து கொண்டு கத்தி, அரிவாள்போன்றவற்றால் சரமாரியாக தாக்கினர்.
இதில் தலை, கழுத்து, கை, கால் என மொத்தம் எட்டு இடங்களில் வெட்டுப்பட்ட தேவன் மயங்கி விழுந்தார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவில் விழாவுக்கு வந்தவர்களும், இன்னிசை நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தவர்களும் அங்கிருந்து சிதறி ஓடினர்.
திருவொற்றியூர் போலீஸார் விரைந்து வந்து தேவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தலைமறைவாகி விட்ட மங்கை, கார்த்திக் உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications