தேசிய கொடி அவமதிப்பு சர்ச்சையில் சானியா!
டெல்லி:
![]() |
சானியா மிர்ஸா வாயைத் திறந்தாலே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுகிறார்.போட்டிகளில் கலந்து கொள்ளும்போது அவர் அணியும் டிரஸ் குறித்து முன்பு சர்ச்சைஎழுந்தது. இதற்கு அவர் பதிலளித்துப் பேசப் போக அதுவும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதனால் சமீப காலமாக சானியா அதிகம் பேசுவதில்லை. குறிப்பாக பொதுஇடங்களில் மிகவும் அடக்கமாக பேசக் கற்றுக் கொண்டு விட்டார். நேற்றுமுன்தினம்தான் கொல்கத்தாவில் பேட்டி அளித்தபோது, நான் ஏதாவது பேசினாலேசர்ச்சையாகி விடுகிறது. எனவே பேசும்போது அளந்து அளந்துதான் பேசுகிறேன் என்றுகூறியிருந்தார் சானியா.
சொல்லி வாய் மூடுவதற்குள் ஒரு பஞ்சாயத்தை கூட்டிக் கொண்டு வந்து விட்டார்சானியா. இத்தாலியைச் சேர்ந்த லோட்டோ நிறுவனம் சானியாவை விளம்பர மாடலாகபுக் செய்துள்ளது. அதன் ஷூ விளம்பரத்தில் சானியா நடித்துள்ளார்.இந்த விளம்பரம்தான் சூட்டைக் கிளப்பியுள்ளது. இதில், கையில் ஒரு கிடாரைப்பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார் சானியா. கிடாரின் கைப்பிடி மேலே இருக்க, கீழ்ப்பகுதியின் மீது சானியா தனது வலது காலை வைத்திருக்கிறார். அவர் கால் வைத்துள்ளஇடத்தில், தேசியக் கொடியின் மூவண்ணம் இடம் பெற்றுள்ளது.
இதுதான் பிரச்சினையைக் கிளப்பி விட்டுள்ளது. தேசியக் கொடி மீது கால் வைத்தபடிநின்று தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்படுத்தி விட்டார் சானியா என்று கூறிபிரியங்கா, ராகுல் காந்தி பேரவை என்ற அமைப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
சானியாவின் சொந்த ஊரான ஹைதராபாத் நகரில் அவரது கொடும்பாவியை எதிர்த்துஅவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த அமைப்பின் தலைவரான மனோஜ்அலெக்சாண்டர் கூறுகையில்,
![]() |
![]() |















Click it and Unblock the Notifications