பிரான்ஸ்-இந்தியா சுற்றுலா ஒப்பந்தம்
டெல்லி:
சுற்றுலாத் துறையில் இந்தியாவு, பிரான்சும் இணைந்து செயல்படஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி பிரான்ஸ் அதிபர் ஜேக்கஸ் சிராக் டெல்லிவந்திருந்தார். அவரது வருகையின்போது, இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் இடையேசுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்திற்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கைஎடுக்கப்படும்.
இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவரநடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா மற்றும் பயணத் துறையில், மனித வளத்தைமேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.சுற்றுலாத்துறை மூலம் இரு நாட்டு மக்களிடையேயும் நல்லுறவை ஏற்படுத்தவும் இந்தஒப்பந்தம் வழி செய்கிறது.
சுற்றுலா நிர்வாகம், மேலாண்மை ஆகியவற்றில் இரு நாடுகளும் தங்களதுஅனுபவங்களை பகிர்ந்து கொள்வது, சுற்றுலா மேம்பாடு, வர்த்தக வாய்ப்புகள்உள்ளிட்டவையும் இந்த ஒப்பந்தம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.
முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அடுத்த 2ஆண்டுகளுக்கு தானாகவே இது புதுப்பிக்கப்படும். அதன் பிறகு இரு நாடுகளும்விரும்பினால் மீண்டும் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். இல்லாவிட்டால்ஒப்பந்தம் முடிவுக்கு வரும்.












Click it and Unblock the Notifications