கலாம் வருகை-கேரளத்தில் குண்டு வெடிப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வந்த நேரத்தில், திருவனந்தபுரம் தபால் நிலையத்தில் தபாலில் அனுப்பப்பட்டகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று கேரளா வந்திருந்தார். அவர் வருவதற்கு சில மணி நேரம் முன்புதிருவனந்தபுரம் மணக்காடு தபால் நிலையத்தில் தபால் வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்குள்ள காவல் நிலையத்தில் ஊழியர் ரவிக்குமார் வந்திருந்த தபால்களை பிரித்துக் கொண்டிருந்தார்.அப்போது சீல் வைக்கப்பட்ட 3 உறைகளில் ஒன்றை எடுத்து அவர் பிரித்தார்.

அப்போது அது பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாகயாரும் இதில் காயமடையவில்லை. உடனடியாக போலீஸார் விரைந்து வந்தனர். வெடிகுண்டு நிபுணர்களும்விரைந்தனர்.

சீல் வைக்கப்பட்டிருந்த மற்ற இரு உறைகளையும் பத்திரமாக மீட்டு அவற்றை முன்னெச்சரிக்கையுடன் பிரித்துப்பார்த்தபோது அதில் வெடிபொருள் இருந்தது தெரிய வந்தது.

இந்த மூன்று உறைகளும் ஸ்ரீகாரியம் தபால் நிலையத்திலிருந்து வந்திருந்தன. இவற்றை யார் அனுப்பியது என்றவிவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில் கேசவபுரம் என்ற இடத்தில் ஒரு கடைக்கு வந்தபார்சலை பிரித்துப் பார்த்தபோது அதுவும் வெடித்தது. இதிலும் யாரும் காயமடையவில்லை.

இந்த இரு சம்பவங்கள் தவிர திருவனந்தபுரம் புறநகரில் உள்ள மலாயிங்கில் என்ற இடத்தில் குரூட் ஆயில்குண்டு ஒன்றும் வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டது. இப்படி அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள்கண்டுபிடிக்கப்பட்டதால் திருவனந்தபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குடியரசுத் தலைவர் வருகையின்போது இவ்வாறு குண்டுகள் வெடித்ததால் திருவனந்தபுரத்தில் பாதுகாப்புபன்மடங்கு அதிகரிக்கப்பட்டது. டெல்லியிலிருந்து வெடிகுண்டு நிபுணர்களும் திருவனந்தபுரம் விரைந்துள்ளனர்.

இந் நிலையில் கலாம் இன்று தமிழகம் வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+