பெரியார் அவமதிப்பு: சிவசேனா பிரமுகர் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு சந்தனம் பூசிய விவகாரத்தில், கடுமையாக கருத்துதெரிவித்தது தொடர்பாக மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜி.கே.பாலாஜி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலைக்கு கடந்த விநாயகர் சதுர்த்தி விழாவன்றுசந்தனம், விபூதி பூசி பூஜை நடத்தப்பட்டிருந்தது. இதனால் பெரும் பரபரப்புஏற்பட்டது. விஷமிகளை கைது செய்யக் கோரி திராவிடர் கழகத்தினர் போராட்டம்நடத்தினர்.இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தியதில், திண்டுக்கல்மாவட்ட சிவசேனா செயலாளர் தர்மராஜ், அக்கட்சி உறுப்பினர் மணிமாறன்ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில், சிவசேனாவின் மாநில இளைஞரணி அமைப்பாளராக உள்ளதிண்டுக்கல் ஜி.கே.பாலாஜி வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், நாங்கள்பெரியார் சிலையை அவமதிக்கும் செயலில் ஈடுபடவில்லை. எங்கள் மீது பொய்யானபுகார் கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் நாங்கள் இதில் செயல்பட்டிருந்தால், இத்தோடு விட்டிருக்க மாட்டோம்.விளக்குமாற்றால் அடித்து, செருப்பு மாலையும் போட்டிருப்போம் என்றுகூறியிருந்தார்.
பாலாஜியின் இந்த பேட்டி குறித்து திண்டுக்கல் தி.க. வழக்கறிஞர் சங்கத் தலைவர்ஆனந்த முனீஸ்வரன் வடக்கு நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலாஜியை அழைத்து விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்தனர். பின்னர் இன்று காலை மாஜிஸ்திரேட் ஜான்மினோ வீட்டில் ஆஜர்படுத்தியபின்னர் 15 நாள் சிறைக் காவலில் பாலாஜி வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications