மஹாளய அமாவாசை: காவிரியில் மக்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு காவிரியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர்.
இன்று மஹாளய அமாவசையாகும். இந்த தினத்தில் மறைந்த முன்னோர்களை நினைத்து வணங்கிபடையலிடுவது வழக்கம்.இதையொட்டி தமிழகம் முழுவதும் ஆறுகளில் புனித நீராடி முன்னோர்களை வணங்கி மக்கள் வழிபட்டனர்.
திருச்சியில் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர். அம்மா மண்டபம் பகுதியில்பெரும் திரளான மக்கள் தங்களது முன்னோர்களுக்கு படையலிட்டனர். சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.
இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் மஹாளய அமாவாசையையொட்டி சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications