குடிநீர் லாரியில் சிக்கி 3 வயது குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை திருவொற்றியூரில் குடிநீர் லாரியின் டயரில் சிக்கி குழந்தை பலியானது.
சென்னை குடிநீர் லாரிகள் எமனின் ஏஜென்டுகளாக செயல்பட்டு வருகின்றன.ஏகப்பட்ட பேரை பலி வாங்கி வருகின்றன.இந் நிலையில் திருவொற்றியூர் பாலகிருஷ்ணா காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான முருகனி மூன்று வயது குழந்தை தீபவர்ஷினி வீட்டின் அருகேவிளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது குடிநீர் லாரியில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். மக்கள்தண்ணீர் பிடித்து முடித்ததும் லாரி டிரைவர் வேலு அதை பின்னோக்கி இயக்கினார்.
அப்போது லாரி குழந்தையின் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயேதீபவர்ஷினி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துலாரி டிரைவர் வேலுவைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications