ஜெர்மனி அதிவேக ரயில் விபத்தில் 25 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
லாதென்:
-->மின் காந்த விசையால் இயங்கும் ஜெர்மனியில் அதி நவீன பறக்கும் ரயிலும் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தரயிலும் மோதிக் கொண்டதில் 25 பேர் பலியாயினர்.![]() |
![]() |
ஜெர்மனியின் வட மேற்கு பகுதியில் உள்ள லாதென் நகரில் இந்த விபத்து நடந்தது.
காந்த விசையால் இயங்கும் இந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து ஓரடி மேலே பறக்கும் ரயிலாகும். இந்த ரயில்தனது பாதையில் நின்றிருந்த பராமரிப்பு ரயிலுடன் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நடந்தது.
இதில் 25 பேர் பலியாயினர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்த ரயில் டிரான்ஸ்ராபிட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. விபத்து நடந்தபோது அந்த ரயில் 170 கி.மீவேகத்தில் பறந்து கொண்டிருந்தது.
விபத்து நடந்த லாதென் நகர் நெதர்லாந்து நாட்டு எல்லை அருகே உள்ளது.














Click it and Unblock the Notifications