நக்ஸல்களுக்கு ஆயுதம்: தமிழக பெண் கைது

Subscribe to Oneindia Tamil

நகரி:

ஆந்திராவில் தமிழக எல்லைப் பகுதியில் வெடி மருந்து கிடங்கில் நடத்தப்பட்டசோதனையில் ஏராளமான வெடி மருந்துகள் சிக்கின. இது தொடர்பாக தமிழக பெண்உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுக்கு சென்னையில் இருந்து ராக்கெட் குண்டுகள்மற்றும் லாஞ்சர்கள், வெடி பொருள் சப்ளை செய்யப்பட்ட விவகாரத்தில்தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

இந் நிலையில் சித்தூரில் நக்ஸல் ஆதரவாளர்கள் என கருதப்படும் பிரகாசம்மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர், நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்ஜிபாபு,அனந்தபுரம் நகரைச் சேர்ந்த நாகப்பா ஆகியோர் பிடிபட்டர்.

இதில் குடியாத்தத்தில் இருந்து வெடி பொருட்களை வரவழைத்து நக்ஸல்களுக்குத்தரும் வேலையில் நாகப்பா ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களுக்கு குடியாத்தம் பகுதியில் இருந்து வெடி பொருட்களை வாங்கி விற்பனைசெய்து வந்த சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பரின் மனைவிஜானகி பிடிபட்டார்.

ஜானகி இவர்கள் தந்த தகவலின்பேரில் ஒரு காரின் டிக்கியில் இருந்து 1,800டெட்டனேட்டர்கள், 800 ஜெலட்டின் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சித்தூர் மாவட்டம் கங்காதர நெல்லூர் கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவர்ஸ்ரீதர் ரெட்டி என்பவருக்குச் சொந்தமான கிடங்கிலும் சோதனை நடந்தது.

எனவே ஆயுதக் கடத்தலில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருப்பதுதெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+