For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாமக போர் கொடி-திமுக கூட்டணியில் விரிசல்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திமுக கூட்டணி பிளவு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் திருச்சியில் தனித்துப் போட்டியிடப் போவதாகபாமக அறிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகளுடன் ஆற்காடு வீராசாமிதலைமையிலான குழு ஒரு வாரமாக பேச்சு நடத்தி வந்தது. பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சியினர் பல சுற்று பேச்சு நடத்தினர்.

அதே போல மாவட்ட அளவில் கூட்டணிக் கட்சிகளுடன் அந்தந்த மாவட்ட திமுக தலைவர்களும்அமைச்சர்களும் பேச்சு நடத்தி வந்தனர்.

பேச்சுவார்த்தை சுமூகமாக நடப்பதாகவும் இன்று பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றுதிமுக தரப்பு கூறியது. ஆனால், உண்மையில் பேச்சுவார்த்தையில் பெரும் இழுபறியும் மோதலும் நடந்து வந்ததுவெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திருச்சி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ஒரே ஒரு சீட்டை மட்டும் பாமகவுக்கு ஒதுக்க திமுக முன்வந்துள்ளது. இங்கு பாமகவுக்கு சொந்த பலம் ஏதுமில்லை.

ஆனாலும், இங்கு அதிகமான இடங்களைக் கேட்டு பாமக தகராறு செய்தது. அதை திமுக ஏற்க மறுத்ததால்திருச்சியில் தனித்துப் போட்டியிட்டுக் கொள்வதாக பாமக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திருச்சியில் நிருபர்களிடம் பேசிய பாமக துணைத் தலைவர் கேசவ ராமலிங்கம்,

திருச்சியில் எங்களுக்கு ஒரே ஒரு சீட்டை மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்துள்ளது. திமுக மாவட்டச்செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான நேரு எங்களுடன் நேற்று பேச்சு நடத்தினார். அப்போது ஒரே ஒருசீட்டை மட்டும் தருவதாக நேரு சொன்னார். திருச்சியில் பாமகவே இல்லையே என்றார்.

விழுப்புரம், ஜெயங்கொண்டம் போன்ற உங்கள் கட்சி பலமுள்ள இடங்களில் கூடுதல் சீட் கேளுங்கள், திருச்சியில்கேட்காதீர்கள் என்றார். இது கூட்டணி தர்மத்துக்கு விரோதமானது.

இதனால் அவரை கண்டித்து நாங்கள் பாதியிலேயே பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டோம்.ஆனாலும் இன்று வரை எங்களை பேச்சுவார்த்தைக்கு திமுக மீண்டும் அழைக்கவில்லை.

இது குறித்து எங்கள் தலைமையிடம் (ராமதாஸ்) பேசினோம். திருச்சியில் தனித்தே போட்டியிட தயாராகுமாறுஎங்கள் தலைமை கூறிவிட்டது. இதனால் திருச்சியில் நாங்கள் தனித்தே போட்டியிடுகிறோம். திமுகவுடன்கூட்டணி இல்லை என்றார்.

பாமகவின் மாநில துணை பொதுச் செயலாளர் முத்து கூறுகையில், பாமகவை திமுகவினர் மதிப்பதே இல்லை.திருச்சியில் நடந்த திமுக மாநில மாநாட்டிலும் எங்களை கேவலமாக நடத்தினர். இப்போது அரசு விழாக்களிலும்பாமகவை திமுக கண்டு கொள்வதே இல்லை என்றார்.

என்னமோ புகையுதே...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X