கும்பகோணம் வாலிபர் மலேசியாவில் கொலை
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கும்பகோணத்தைச் சேர்ந்த வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகே சோழபுரத்தை சேர்ந்த பூ வியாபரி பசுபதியின் மகன் பாலமுருகன் (25). இவர் ஒன்றரைவருடத்துக்கு முன்பு மலேசியாவுக்கு வேலைக்கு சென்றார்.கோலாலம்பூர் அருகே உள்ள சிலான் என்ற இடத்தில் தோட்ட வேலையில் முதலில் சேர்ந்தார். சில மாதங்கள்அங்கு வேலை செய்த நிலையில், அவருக்கும் தோட்ட உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் வேலையை விட்ட நின்ற பாலமுருகன் அதே பகுதியில் பூக்கடை ஒன்றில் வேலை பார்த்தார்.பாலமுருகனின் அண்ணன்கள் சந்திர சேகர், சேகரும் மலேசியாவில் வேலை செய்கின்றனர்.
இந் நிலையில் கடந்த வியாழக்கிழமை பூக்கடைக்கு பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் மரத்தில்பாலமுருகன் உடல் தொங்க விடப்பட்டு இருந்தார். இந்த கொலையை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை.இது குறித்து மலேசிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications