காளிமுத்துவுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டமன்ற ஹோட்டல்களை குறைந்த விலைக்கு வாடகைக்கு விட்டு அரசுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படகாரணமாக இருந்த விவகாரத்தில் மாஜி சபாநாயகர் காளிமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடியமுன் ஜாமீன் அளித்துள்ளது.

அவர் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்ற விடுதியில் உள்ள இரு உணவு விடுதிகளையும் குறைந்த விலைக்கு குத்தகைக்கு விட்டார் காளிமுத்து.இதனால் அரசுக்கு ரூ. 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

குறைந்த விலைக்கு வாடகைக்கு விட்டதில் ஊழல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்காளிமுத்து மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து கைதாகும் சூழல் உருவானதால் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார் காளிமுத்து. அந்த மனுவில், மதுரை இடைத் தேர்தலில் நான் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கவே இந்தவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய வழக்கு. மேலும் நான் இதய நோயால் பாதிக்கப்பட்டு மதுரையில்சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே எனக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகப்பன், 15 நாட்களுக்குள் மதுரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்காளிமுத்து சரணடைந்து முன் ஜாமீன் பெறலாம்.

அவர் சென்னையில் தான் தங்கியிருக்க வேண்டும். தினமும் காலை 10 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் முன்ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+