நடிகை ஸ்ரீவித்யாவுக்கு உடல் நலம் பாதிப்பு
கொழிஞ்சாம்பறைை (கேரளா):
நடிகை ஸ்ரீவித்யாவுக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் பெட்-ரிடர்ன் ஆகஇருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் நடித்து வந்த மலையாள டிவி தொடர் நிறுத்தப்பட்டுவிட்டது.கேரளத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்து பின்னர் குணசித்திர வேடங்களில்நடித்து வந்தார். பிரிந்து சென்ர கணவருடனான சொத்துப் பிரச்சனையில் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.
இதையடுத்து திடீரென மாயமானார் ஸ்ரீவித்யா. நீண்ட காலத்துக்கு பின் கேரளத்தில் வெளியில் தலைகாட்டினார்.ஆனால், இளம் வயது வாலிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுவில் சிக்கினார்.
ஆனாலும் இதற்கெல்லாம் பதில் ஏதும் கொடுக்காமல் கேரள தொலைக்காட்சி சீரியலில் மட்டும் நடித்து வந்தார்.தேடி வந்த தமிழ் சினிமா சான்ஸ்களைக் கூட ஒதுக்கிவிட்டார்.
![]() |
ஏசியா நெட் டிவிக்கான அந்த தொடர் 200 எபிசோடுகள் வரை போக இருந்தது. ஆனால், 45 எபிசோட்களேமுடிந்த நிலையில் அந்த சீரியல் நிறுத்தப்பட்டுவிட்டது.
இதற்கு ஸ்ரீவித்யாவுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான உடல் நலக் குறைவே காரணமாகக் கூறப்படுகிறது.
![]() |
ஆனால், உறவினர்களை எல்லாம் விட்டு தனித்து வாழ்ந்து வருகிறார் ஸ்ரீவித்யா. அவருக்கு கிருஷ்ணா நாயர்என்ற டாக்டர் சிகிச்சை அளித்து வருகிறார்.
ஸ்ரீவித்யாவுக்கு வேண்டிய உதவிகளை நடிகரும் எம்எல்ஏவுமான கணேஷ்குமார் என்பவர் செய்து வருகிறார்.இவர் தேர்தலில் நின்றபோது ஸ்ரீவித்யா அவருக்காக பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications