இட ஒதுக்கீடு அறிக்கை இன்று பிரதமரிடம் தாக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அறிக்கையை வீரப்ப மொய்லி குழு இன்று பிரதமர்மன்மோகன் சிங்கிடம் சமர்பிக்கிறது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு செய்யும் மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தது.

இந்த மசோதா தாக்கலாக முக்கிய காரணமாக இருந்த மத்திய மனிதவளத்துறைஅமைச்சர் அர்ஜூன் சிங்குக்கு எதிராக டெல்லியில் ஒரு பிரிவு மாணவர்கள்போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து இட ஒதுக்கீட்டை பிறர்க்கு பாதிப்பில்லாமல் அமல்படுத்துவது குறித்துஆராய மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கர்நாடக முதல்வருமான வீரப்பமொய்லி தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் பிரதமர்.

இந்தக் குழு தனது இடைக்கால அறிக்கையை பிரதமரிடம் சமர்பித்துவிட்டது. அதன்அடிப்படையில் தான் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்டவர்களில் வசதியான பிரிவினருக்கு (கிரீமிலேயர்) இட ஒதுக்கீடு அளிப்பதா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.மொத்தமாக பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்றே கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் தனது குழுவின் இறுதி அறிக்கையை கடந்த 15ம் தேதியே தாக்கல்செய்ய இருந்தார் வீரப்ப மொய்லி. ஆனால், அதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்துஇன்று தனது அறிக்கையை பிரதமரிடம் தருகிறார் மொய்லி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+