For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை யுஎஸ் தூதரகத்துக்கு குண்டு மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவேகூடுதல் பாதுகாப்பு போடபட்டுள்ளது. 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்க தூதரகத்துக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.அமெரிக்கவுக்கு விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் மனுவை விசாரித்து சரிபார்க்க தேனாம்பேட்டையில்உள்ள விஎப்எஸ் மையத்துக்கும் சென்னை போலீஸ் கமிஷ்னருக்கும் இந்த மனித வெடிகுண்டு மிரட்டல்இ-மெயில் மூலம் வந்தது.

டேவிட் பால் என்பவரின் பெயரில் வந்த அந்த மிரட்டலில் அமெரிக்க தூதரகம் மனித வெடிகுண்டால்தகர்க்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு மேலும் அதிகாரிக்கப்பட்டுள்ளது. இந்த மனித வெடிகுண்டுமிரட்டல் புரளியாக இருக்கும் என போலீசார் கருதுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X