திமுக-அதிமுக அரிவாள் சண்டை-9 பேருக்கு வெட்டு
மதுரை:
மதுரையில் திமுக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட தேர்தல் தகராறில் 9 பேருக்குஅரிவாள் வெட்டு விழுந்தது.
மதுரை திருநகர் அருகே உள்ள கூத்தியார்குண்டு கிராமத்தைச் சேர்ந்த அழகுவின்மனைவி காளியம்மாள் (40). அதே ஊரைச்சேர்ந்தவர் பாண்டியின் மனைவி இருளாயி(45).திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் 11 வார்டு கவுன்சிலர் பதவிக்கு காளியம்மாள் திமுகசார்பிலும், இருளாயி அதிமுக சார்பிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந் நிலையில் இருளாயியின் மகன் செந்திலுக்கும் திமுகவைச் சேர்ந்த காளியப்பன்கோஷ்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சண்டை அடிதடியாக மாறியதில், செந்திலின் உறவினர் வெங்கடேஷ், கருப்யாைஆகியோரை காளியப்பன் கோஷ்டியினர் அரிவாளால் வெட்டினர்.
இதையடுத்து செந்தில் கோஷ்டி ஆட்களை திரட்டிக் கொண்டு வந்து காளியப்பன்வீட்டுக்குள் புகுந்து அந்தக் குடும்பத்தினரை அரிவாள்களால் வெட்டினர்.
இதில் காளியப்பன் மற்றும் அவரது தாய் அம்மாபிள்ளை, மனைவி செல்லமாரி,சகோதரர் முத்துவேல், அவரது மனைவி அன்னக்கொடி, இன்னொரு சகோதரர்பாலமுருகன் அவரது மனைவி ஆறுமுகம் ஆகிய 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.
வெட்டு வாங்கிய 9 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு கோஷ்டிகளுக்கும் இடையே ஏற்கனவே கோவில் திருவிழாவை கொண்டாடுவதுதொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இப்போது தேர்தலும் சேர்ந்துகொண்டு வெட்டில் போய் முடிந்துள்ளது.












Click it and Unblock the Notifications