மப்பில் தண்டவாளத்தில் லாரி ஓட்டியவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குடிபோதையில், ரயில் தண்டவாளத்தில் டேங்கர் லாரியை ஓட்டிய நபரை போலீஸார்கைது செய்தனர்.

பெங்களூரைச் சேர்ந்தவர் அனில்குமார். டேங்கர் லாரிகளை வைத்து வாடகைக்குவிட்டு வருகிறார். இவரது லாரி ஒன்றை டிரைவர் வடிவேல் என்பவர் சென்னைமணலிக்கு எண்ணையை ஏற்றிச் செல்வதற்காக கொண்டு வந்திருந்தார். அவருடன்கிளீனர் ரமேஷ் என்பவரும் வந்திருந்தார்.

வந்த இடத்தில் இருவரும் மது அருந்தினர். பின்னர் டிரைவர் வடிவேல் லாரியிலேயேபடுத்துத் தூங்கி விட்டார். போதையில் இருந்த ரமேஷுக்கு லாரியை ஓட்டிப் பார்க்கும்ஆசை வந்தது.

இதையடுத்து லாரியை எடுத்த அவர் வேகமாக ஓட்டிச் சென்றார். எங்கு போகிறோம்என்பது கூடத் தெரியாமல் படு வேகமாகவும், தாறுமாறாகவும் அவர் லாரியைஓட்டியுள்ளார்.

திருவொற்றியூர் வரை அவர் வந்து விட்டார். அப்போது மணி இரவு 10.30.ராயபுரத்தில் லாரி நுழைந்த போது போலீஸார் லாரியை நிறுத்துமாறு சிக்னல்காட்டினார். ஆனால் போலீஸாரைப் பார்த்ததும் பயந்து போன ரமேஷ் லாரியைநிறுத்தாமல் வேகமாக ஓட்டினார்.

இதையடுத்து ஆட்டோ ஒன்றில் போலீஸார் லாரியை துரத்தினர். ரமேஷும் லாரியைநிறுத்தாமல் சென்டிரல் ரயில் நிலையம் வரை வந்து விட்டார். அங்கிருந்து பல்லவன்சாலைக்குள் நுழைந்த அவர் லாரியை சிந்தாதிரிப் பேட்டை கூவம் ஆற்றையொட்டிவேகமாக செலுத்தினார்.

அங்கு பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வேகமாக லாரிவருவதைப் பார்த்ததும் அலறி அடித்து எழுந்தோடினர். கூவம் சாலையிலிருந்துஇறங்கிய லாரி, மத்திய சிறையின் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில்இறங்கியது. தண்டவாளத்தில் லாரியை ஓட்டத் தொடங்கினார் ரமேஷ்.

மொத்தம் உள்ள 3 தண்டவாளங்களில், 3வது தண்டவாளத்தில் லாரியை செலுத்தினார்ரமேஷ். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 500 மீட்டர் தூரம் வரைலாரியை ஓட்டினார் ரமேஷ். ஆனால் அதற்குள் மேல் அவரால் ஓட்ட முடியவில்லை.

இருந்தாலும் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ரமேஷ், படு குஷியாகலாரியை முன்னுக்கு ஓட்டுவதும், ரிவர்ஸ் எடுத்து வருவதுமாக விளையாட்டு காட்டத்தொடங்கினார்.

அதற்குள் ரயில்வே போலீஸார், உள்ளூர் போலீஸார், பொதுமக்கள் எனநூற்றுக்கணக்கானோர் கூடி விட்டனர். ரமேஷின் செயலைப் பார்த்த பொதுமக்கள்வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றனர். அவர்களில் சிலர் லாரி மீது கல்வீசி ரமேஷைகீழே இறங்கி வருமாறு குரல் கொடுத்தனர்.

சரமாரியாக கற்கள் பறக்கவே பயந்து போன ரமேஷ் என்ன செய்வதென்று தெரியாமல்குழம்பினார். அப்போது இன்ஸ்பெக்டர் சின்ராம் என்பவர் லாரியில் ஏறி ரமேஷைவலுக்கட்டாயமாக கீழே இறக்கினார். அப்போது குடிபோதை அதிகமாக மயக்கநிலைக்கு சென்று விட்டார் ரமேஷ்.

அவரையும் ஏற்கனவே மப்பில் மயங்கித் தூங்கிக் கிடந்த வடிவேலையும் அங்கிருந்துதூக்கிக் கொண்டு வந்த போலீஸார் இருவரையும் தண்ணீர் தெளித்து எழுப்பினர்.அவர்கள் இருவரையும கூடியிருந்த பொதுமக்கள் அடிக்க பாய்ந்தனர். அவர்களைபோலீஸார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் இருவரையும் அங்கிருந்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.தண்டவாளத்தின் நடுவே நின்று கொண்டிருந்த லாரியை கிரேன் மூலம் தூக்கிஅப்புறப்படுத்தினர். இந்த களேபரம் முடியும் வரை அந்த வழியாக ரயில்கள் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

அதிகாலை 4 மணிக்குத்தான் இந்த களேபரம் முடிவுக்கு வந்தது. ரமேஷையும்,வடிவேலையும் போலீஸார் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தால் மணலியிலிருந்து கடைசியாக ரயில் தண்டவாளத்தில் லாரி ஏறும்வரை உள்ள இடங்களில் பெரும் பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+