பட்டாசு விற்பனைக்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு
சென்னை:
சென்னையில் பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு விற்பனைக்குபல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை உயர்நீதிமன்றம்விதித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், சென்னை நகரில் அனுமதியில்லாமல், நடைபாதைகளிலும்,தெருக்களிலும், சாலையோரங்களிலும் பட்டாசுக் கடைகள்போடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துருஆகியோர் அடங்கிய பெஞ்ச் சென்னை நகரில் பட்டாசுவிற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீர்ப்பளித்தனர்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தடையில்லாசான்றிதழ் பெற்ற பிறகுதான் அதிகாரிகள் பட்டாசுகளை விற்பதற்குஉரிமம் வழங்க வேண்டும்.
உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ள மனுவில் சுட்டிக் காட்டியுள்ளஇடத்தை வெடிமருந்து துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுநடத்த வேண்டும். வெடிமருந்து சட்ட நடைமுறைகள்பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பிறகுதான்விற்பதற்கும், கடைகளை வைப்பதற்கும் அனுமதி வழங்கவேண்டும்.
இரு பட்டாசுக் கடைகளுக்கு இடையே 15 மீட்டர் இடைவெளிஇருக்க வேண்டும். உரிமம் பெற்ற இடத்தைத் தவிர வேறு எங்கும்கடை போடக் கூடாது.
பொது இடங்களில், சாலைகளில், தெருக்களில் கடைகள் வைக்கக்கூடாது. கடைக்கு முன்பு கூடாரம் போடக் கூடாது. தீபாவளி போன்ற பண்டிகை காலத்தின்போது பட்டாசுகளை எப்படிகையாள வேண்டும், வெடிக்க வேண்டும் என்பது குறித்தவிவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்.
நடப்பு தீபாவளிக்கு, ஏற்கனவே பட்டாசு விற்க உரிமம்பெற்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
கடைகளில் ஆயிரம் கிலோவுக்கு மேல் பட்டாசுகளை வைக்க்ககூடாது. பட்டாசு கடைகளில் தண்ணீர் தொட்டிகள், தீயணைப்புகருவிகளை வைத்திருக்க வேண்டும்.
உரிமம் கேட்டு நிலுவையில் உள்ள மனுக்கைள சட்டப்படிபரிசீலித்து 8 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும். விதிமுறைகளைகண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத யாருக்கும் தடையில்லாசான்றிதழோ, தற்காலிக உரிமமோ வழங்கக் கூடாது.
விதிமுறைகளை பட்டாசுக் கடை போட்டிருப்பவர்கள், விற்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம். அவர்கள் வைத்திருக்கும்பட்டாசுகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களில் காலிமைதானங்களில் வைத்து பட்டாசுகள் விற்பனைசெய்யப்படுகின்றன. அதேபோல சென்னை நகரிலும் திறந்தவெளிமைதானத்தில் பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதிவழங்குவது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரும்,மாநகராட்சி ஆணையரும் சேர்ந்து பரிசீலித்து முடிவெடுக்கலாம்என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications