கடலூர் மாவட்டத்தில் இ.கம்யூ. தனித்துப் போட்டி
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து தனித்துப் போட்டியிடப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் இடங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக திமுககூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திமுகவுக்கும்இடையே ஆங்காங்கே பிரச்சினை நிலவி வருகிறது.மதுரை மாநகராட்சியில் 10 வார்டுகளில் தனித்துப் போட்டியிடப் போவதாகஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போதுகடலூர் மாவட்டத்தில் தனித்து போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது.
இடப் பங்கீடு தொடர்பாக திமுக சார்பில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்,மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினார்.இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதையடுத்து தனித்துப் போட்டியிடும் முடிவை இந்திய கம்யூனிஸ்ட் எடுத்தது.இதுகுறித்து மாவட்ட செயலாளர் மணிவாசகம் கூறுகையில், திமுகவுடன் நடத்திய இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாட ஏற்படவில்லை.
எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பு மனு தாக்கல் செய்த இடங்களில் தனித்துப்போட்டியிடுவது எனவும், போட்டியிடாத இடங்களில் ஜனநாயக முற்போக்குக்கூட்டணியை ஆதரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications