முரசு: தேமுதிக மனுவைப் பரிசீலிக்க உத்தரவு
சென்னை:
உள்ளாட்சி தேர்தல் சின்ன விதிமுறைகளின் கீழ் தேமுதிக, ஜனதாஆகிய கட்சிகள் சின்னம் கோரி தாக்கல் செய்துள்ளவிண்ணப்பங்களை பரிசீலனை செய்யுமாறு மாநில தேர்தல்ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான சின்னங்களில் முரசு சின்னமும், ஏர்உழவன் சின்னமும் இடம் பெறவில்லை. இதையடுத்து முரசுசின்னத்தை தங்களது கட்சிக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி தேமுதிகசார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தனும், ஏர்உழவன் சின்னம் கோரி ஜனதாக் கட்சி சார்பில் அதன் தலைவர்சுப்ரமணியம் சாமியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.இந்த மனுவை நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர்விடுதலை, இரு கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அல்ல.இவர்களுக்கு சுயேச்சை சின்னங்களைத்தான் ஒதுக்க முடியும்.
ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்டோர் கேட்டால் குலுக்கல்முறையில் சின்னங்களை முடிவு செய்வோம் என்றும் அவர்வாதாடினார். இதையடுத்து தேமுதிக வழக்கறிஞர் வாதிடுகையில்,முரசு சின்னம் இல்லாவிட்டால் தீபம் சின்னத்தை ஒதுக்க வேண்டும்என்று வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்,உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் சின்ன விதிமுறைகளின்கீழ் இரு கட்சிகளும் சின்னம் கோரி தாக்கல் செய்துள்ளவிண்ணப்பங்களைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications