பட்டாசு விபத்து பலி 4 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசுத்தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் இறந்தவர்களின்எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

சிவகாசி அருகே சாத்தூர் செல்லும் சாலையில், மீனாம்பட்டி என்றஇடத்தில் ஜெயராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுத்தொழிற்சாலை உள்ளது. இங்கு தீபாவளியையொட்டி பட்டாசுத்தயாரிக்கும் பணி படு மும்முரமாக நடந்து வருகிறது.

மொத்தம் 40 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர்.நவீன பட்டாசுகள் தயாரிக்கும் அறைகளில் நேற்று பிற்பகலில்பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் 27 அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. அங்கு வேலைபார்த்துக் கொண்டிருந்த ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் சிதறிஓடினர். இந்த விபத்தில் சிக்கி மாரீஸ்வரி (19), செல்வி (45),பாக்கியம் (50) ஆகிய 3 தொழிலாளர்கள் பரிதாபமாகஉயிரிழந்தனர். இந்த விபத்தில் பாக்கியநாதன் (30) என்பவரும்உடல் கருகிய நிலையில் பின்னர் கண்டெடுக்கப்பட்டார்.

8 பெண்கள் உள்பட 13 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் மதுரை அரசு ராஜாஜிமருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர்பார்வையிட்டார். மேலும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவியும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000உதவி, லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 6000 நிதியுதவியுயம்அவர் அறிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் விருதுநகர் அரசு மருத்துவனைக்கு சென்றுகாயமடைந்து அனுமதிக்கப்பட்டவர்களை பார்த்து நலம்விசாரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+