For Daily Alerts
Just In
உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை இல்லை!
டெல்லி:
தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்திய தலித் கம்யூனிஸ்ட் கட்சி என்ற கட்சியின் தலைவர் கந்தசாமி சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட தலைவர் பதவிகளுக்குநேரடித் தேர்தலை ரத்து செய்து விட்டு மறைமுகத் தேர்தலை தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. எனவே இந்தத்தேர்தலை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தேன்.அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், தேர்தலை நடத்தத் தடை விதிக்க மறுத்த விட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்தமனுவை நீதிபதிகள் அசோக் பான் மற்றும் மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
விசாரணைக்குப் பின்னர், தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்க முடியாது. திட்டமிட்டபடி தேர்தலைநடத்தலாம் என்று தீர்ப்பளித்து கந்தசாமி சிங்கின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
Story first published: Sunday, October 1, 2006, 5:30 [IST]