For Daily Alerts
Just In
ஐ.எஸ்.ஐ. சதிக்கு ஆதாரம் உள்ளது: இந்தியா
டெல்லி:
மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு உள்ளதொடர்புக்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் வழங்கத் தயாராக உள்ளதாக இந்திய வெளியுறவு செயலாளர்சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளராக சிவசங்கர் மேனன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவுநிறுவனத்திற்கு உள்ள தொடர்பு குறித்து மும்பை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக போதுமான ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான்மறுத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் கோரினால் அதுதொடர்பான ஆதாரங்களை அவர்களிடம் வழங்க இந்தியாதயாராக உள்ளது.
தீவிரவாத எதிர்ப்பு தொடர்பாக வெறும் பேச்சுடன் பாகிஸ்தான் நின்று விடக் கூடாது. தீவிரவாதத்தை வேரறுக்கஅது தீவிரமாக செயல்பட்டாக வேண்டும்.இரு நாடுகளின் வெளியுறவு செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது இதை இந்தியா வலியுறுத்தும்என்றார் சரண்.
Comments
Story first published: Sunday, October 1, 2006, 5:30 [IST]