தேவர் சிலை: கருணாநிதிக்கு ஒ.பி. கண்டனம்
சென்னை:
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கடந்த அதிமுக ஆட்சியில் அனுமதி தரஜெயலலிதா மறுத்து விட்டார் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதுஅப்பட்டமான பொய் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக தேர்தல் பிரிவுசெயலாளருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலையை வைக்க முதல்வராக இருந்தபோது அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா அனுமதி அளிக்கவில்லை என்று மைனாரிட்டி திமுக அரசின் முதல்வர்கருணாநிதி வழக்கம் போல பொய் சொல்லி மக்களை குழப்பப் பார்க்கிறார்.புரட்சித் தலைவி, தமது ஆட்சிக்காலத்தில் இதுவரை யாருமே செய்யாத வகையில்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிரமாண்டமான திருவுருவச் சிலையைதமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரத்தில் நிறுவி அதனைத் திறந்து வைத்துதேவர் பெருமகனை பெருமைப்படுத்தியவர்.
என்னைறக்குமே தேவர் திருமகனருாக்கு மரியாதை செலுத்துவதில் எங்கள் கழகப்பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி முன்னணியில் இருந்திருக்கிறார் என்பது யாரும்மறுக்க முடியாத உண்மை.
அம்மாதான், சென்னை மாநகரத்தில் தேவர் திருமகனாரின் சிலையை நிறுவினார்என்பது அனைவருக்கும் தெரியும். எனவே கருணாநிதியின் புளுகு மூட்டைகளால்யாரும் ஏமாற மாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றுகூறியுள்ளார் பன்னீர் செல்வம்.