For Daily Alerts
Just In
பாண்டிச்சேரி இன்று முதல் புதுச்சேரி
புதுச்சேரி:
பாண்டிச்சேரி என்ற பெயர் இன்று முதல் புதுச்சேரி என்று அழைக்கப்படும்.
புதுவை மாநிலத்தின் ஆரம்ப காலப் பெயர் புதுச்சேரி என்று தான் இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் இதைபாண்டிச்சேரி என்று மாற்றி விட்டனர். அதன் பின்னர் பாண்டிச்சேரி, புதுவை, பாண்டி என பலவிதமாகஅழைக்கப்பட்டு வந்தது புதுச்சேரி.புதுவையின் பெயரை புதுச்சேரி என்ற பழைய பெயருக்கே மாற்ற புதுவை மக்கள் நீண்ட காலமாக கோரிவந்தனர். இதைத் தொடர்ந்து புதுவை மாநில சட்டசபையில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்தியஅரசுக்கு அனுப்பினர்.
இந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு புதுச்சேரி என்று பெயர் மாற்ற சட்ட மசோதாநிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. இதற்கு கடந்த 13ம் தேதி இந்தமசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
இதைத் தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி முதல் பாண்டிச்சேரி புதுச்சேரி என அழைக்கப்படும் என மத்திய அரசுஅறிவித்தது. இதையடுத்து இன்று முதல் பாண்டிச்சேரி புதுச்சேரி என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் எனபுதுவை அரசு அறிவித்துள்ளது.
Comments
Story first published: Sunday, October 1, 2006, 5:30 [IST]