வாலி வீட்டில் புகுந்த நல்ல பாம்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கவிஞர் வாலியின் வீட்டினுள் மிகப் பெரிய நல்ல பாம்பு புகுந்தது. அதைதீயணைப்புப் படை வீரர்கள் பிடித்தனர்.

கவிஞர் வாலியின் வீடு சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கற்பகம் அவென்யூவில்உள்ளது. நேற்று காலை வாலியின் வீட்டினுள் 4 அடி நீளமுடைய நல்ல பாம்பு புகுந்துவிட்டது.

பாம்பு உள்ளே புகுவதைப் பார்த்த வாலியின் மனைவி பயத்தில் அலறினார்.வெளியே ஓடி வந்த அவர் நல்ல பாம்பு வீட்டுக்குள் புகுந்து விட்டதாக கூறி அக்கம்பக்கத்தினரின் உதவியைக் கோரினார். ஆனால் நல்ல பாம்பை எப்படிப் பிடிப்பதுஎன்ற பயத்தில் அக்கம் பக்கத்தினர் உதவ தயங்கினர்.

இந்த நிலையில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு, குளியலறைக்குள் நுழைந்தது.இதையடுத்து வாலியும், வீட்டில் இருந்த மற்றவர்களும் குளியலறைக் கதவை மூடினர்.அதன் பின்னர் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் விரைந்துவந்தனர். குளியலறையில் பாம்பு எங்கே ஒளிந்திருக்கிறது என்பதை அவர்கள்தேடினர். ஆனால் பாம்பு கண்ணில் படவில்லை.

இதையடுத்து பேசினுக்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகித்த அவர்கள் அதற்குள்குழாய் மூலம் தண்ணீரை வேகமாக பாய்ச்சினார்கள். தண்ணீரைப் பார்த்த பாம்பு,மெதுவாக தலையை நீட்டியது.

இதையடுத்து பாம்பின் வாலைப் பிடித்து அதை வெளியே தூக்கிப் போட்டனர்தீயணைப்பு வீரர்கள். பின்னர் பாம்பின் மீது தண்ணீரைப் பாய்ச்சி அது வேகமாக நகரமுடியாத படி செய்தனர். தண்ணீராக இருந்ததால் பாம்பால் வேகமாக செல்லமுடியவில்லை.

இதையடுத்து ஸ்ரீபதி என்ற வீரர் பாமம்பின் தலையை லாவகமாக பிடித்து தூக்கினார்.சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பாம்பு பத்திரமாக பிடிபட்டது.இதையடுத்து வாலி குடும்பத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+