கவுன்சிலர்கள் கட்சி தாவினால்...எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கவுன்சிலர்கள் கட்சி தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கைஎடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் எச்சரித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னையில் மாநில தேர்தல் ஆணையர்சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில்,உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் கட்சி தாவல் நடவடிக்கையில் கவுன்சிலர்கள்ஈடுபடக் கூடும் என அச்சத்தை சில கட்சிகள் வெளியிட்டுள்ளன.
கட்சி தாவல் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் அனுமதிக்காது. தேர்தலுக்குப்பின்னர் கட்சி தாவும் நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கிரிமினல்நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் 15,000 வாக்குச் சாவடிகள் மிகவும் பதட்டமானவையாகஅறியப்பட்டுள்ளது. இங்கு அதிரடிப்படையினர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புநடவடிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் சந்திரசேகரன்.












Click it and Unblock the Notifications