சென்னை-சிக்கலில் திமுக: சிபிஎம் தனித்து போட்டி
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்டஅறிக்கையில்,சென்னை மாநகராட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவிரும்பிய 18 வார்டுகளுக்கான பட்டியலை வட சென்னை மற்றும் தென் சென்னைமாவட்ட திமுக செயலாளர்களிடம் கொடுத்தோம்.
ஆனால் கடைசி வரை திமுக தரப்பிலிருந்து எங்களை பேச்சுவார்த்தைக்கேஅழைக்கவில்லை. தென் சென்னை மற்றும் வட சென்னை மாவட்ட திமுகசெயலாளர்கள் எங்களை பொருட்படுத்தவும் இல்லை.
இந் நிலையில் 2 இடங்கள் மட்டும் ஒதுக்கப்படுவதாக தகவல் கிடைத்தது.தன்னிச்சையாக அறிவித்த முறை மற்றும் 2 இடங்கள் மட்டும்தான் என்பதையும்எங்களால் ஏற்க முடியவில்லை.
திமுகவின் இந்த செயல்பாடு, கூட்டணி தத்துவத்திற்கு முரண்பாடானதாகும். இதைதிமுக தலைமையிடம் தெரிவித்து விட்டோம். 30ம் தேதி வரை சுமூக உறவுக்குமுயற்சித்தோம். ஆனால் திமுக அணுகுமுறை அதற்கு உதவிடவில்லை.
எனவே தவிர்க்க இயலாத சூழ்நிலையில் 8 வார்டுகளில் தனித்துப் போட்டியிட முடிவுசெய்துள்ளோம். 59வது வார்டில் தேவி, 35வது வார்டில் பாண்டியன், 12வது வார்டில்ஷாஜகான், 45வது வார்டில் ரேணுகாதேவி, 103வது வார்டில் சரளா, 69வது வார்டில்சரஸ்வதி, 130வது வார்டில் அழகு, 142வது வார்டில் சரோஜா ஆகியோர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications