மாநிலம் முழுவதும் ரெளடிகளுக்கு வலைவீச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் சமூக விரோதிகள், ரெளடிகளை கைது செய்து உள்ளேதள்ளும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இம் மாதம் 13, 15ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது.இதையொட்டி 81,000 தமிழக போலீசார் தவிர பாதுகாப்பு பணிக்காக 6மாநிலங்களைச் சேர்ந்த போலீசார் தமிழகம் வரவுள்ளதாக டிஜிபி முகர்ஜிதெரிவித்துள்ளார்.மேலும் அனைத்து மாவட்டங்களிலும் சமூக விரோதிகள், ரெளடிகளைக் கைது செய்யஉத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
தேர்தலில் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications