திருப்பிவிடப்பட்ட மொரீசியஸ்-சென்னை விமானம்
சென்னை:
மொரீசியஸில் இருந்து சென்னை வந்த விமானம் மிக மோசமான வானிலைகாரணமாக ஹைதராபாத்திலேயே தரையிறக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவு சென்னையில் திடீரென கன மழை பெய்தது. மீனம்பாக்கத்தில்அதிகாலை 2 மணிக்கு அடை மழை பெய்தததால் மொரீசியசின் போர்ட் லூயிஸ்நகரில் இருந்து சென்னை வந்த ஏர்-மொரிசியஸ் விமானம் ஹைதராபாத்துக்குதிருப்பிவிடப்பட்டது.இதையடுத்து 179 பயணிகளுடன் அந்த விமானம் மணிக்கு ஹைதராபாத்தில் தரையிறங்கியது.பின்னர் வானிலை சரியானதும் சென்னைக்கு வந்து, காலை 8.30 மணிக்கு 205பயணிகளுடன் மீண்டும் மொரீசியஸ் கிளம்பிச் சென்றது.
மதுரை விமானத்தில் கோளாறு:
இந் நிலையில் பாஜக எம்.பி. திருநாவுக்கரசர், ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் செல்லவிருந்த மதுரை விமானத்தில் கோளாறுஏற்பட்டதால் விமானம் ரன்வேயிலேயே நிறுத்தப்பட்டு பயணிகள்இறக்கிவிடப்பட்டனர்.
சென்னையிலிருந்து இன்று காலை 6.45 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம்மதுரைக்குக் கிளம்பியது. இந்த விமானத்தில் திருநாவுக்கரசர், சுப்பிரமணியம் சுவாமி,சந்திரலேகா ஆகியோர் உள்பட 36 பேர் இருந்தனர்.
விமானம் ஓடுபாதையில் கிளம்பியபோது விமானத்தில், கோளாறு ஏற்பட்டிருப்பதைவிமானி உணர்ந்தார். இதையடுத்து விமானத்தை நிறுத்திய அவர் பயணிகளைதரையிறங்க உத்தரவிட்டார்.
உரிய நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அனைவரும்உயிர் தப்பினர்.
கோளாறு சரி செய்யப்பட்ட பின் காலை 8.4 மணிக்கு அந்த விமானம் மதுரைபுறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications