காலை வாரிய அதிமுக வேட்பாளர்கள் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு,எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் களத்திலிருந்து விலகிய அதிமுகவினரைகட்சியிலிருந்து நீக்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு,வேட்பு மனு தாக்கல் செய்த பலர் எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும்,சுயேச்சைகளுக்கு ஆதரவாகவும் தேர்தல் களத்திலிருந்து விலகியுள்ளனர். இதனால்அங்கு அதிமுக போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.இதுபோல அதிமுக வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்த பின்னர் போட்டியிலிருந்துவிலகியவர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் ஜெயலலிதா.
நீக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வேலூர், திருவண்ணாமலை, சிவகங்கை,விழுப்புரம், கரூர், திண்டுக்கல், விருதுநிகர், கடலூர் ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் ஆவர்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், கட்சியினர் யாரும்இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications