சச்சின் ஆட்டத்தால் இந்தியா ப்ளூ வெற்றி
சென்னை:
சென்னையில் நடந்து வரும் சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் அடித்த அபாரசதத்தால் இந்தியா ப்ளூ அணி வெற்றி பெற்றது.
இந்தியா ப்ளூ, ரெட் மற்றும் க்ரீன் அணிகளுக்கிடையிலான சேலஞ்சர் கோப்பைக் கிரிக்கெட் போட்டிசென்னையில் நிடந்து வருகிறது. டிராவிட் தலைமையிலான ப்ளூ அணியும், முகம்மது கைப் தலையிைலான கிரீன்அணியும் மோதின.தலில் ஆடிய ப்ளூ அணி அபாரமாக ஆடி 381 ரன்களைக் குவித்தது. சச்சின் டெண்டுல்கர் 100 பந்துகளில் 139ரன்களைக் குவித்தார். இதில் 2 சிக்சர்களும், 16 பவுண்டரிகளும் அடங்கும்.
கேப்டன் டிராவிட் 62 ரன்களும், டோணி 79 ரன்களும் குவித்தனர். இர்பான் பதான் சிறப்பாக ஆடி 54 ரன்களைஎடுத்தார். கிரீன் அணி சார்பில் எல்.பாலாஜி 2 விக்கெட்டுகளை எடுத்தார். பையூஷ் சாவ்லா, லாஹிரி ஆகியோர்தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் விளையாடிய கிரீன் அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது. அந்த அணி சார்பில் விளையாடியமுன்னாள் இந்திய கேப்டன் கங்குலியின் ஆட்டம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.ஆனால் ஏமாற்றம் அளிக்கும் வகையில் விளையாடிய கங்குலி 24 ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.
பார்த்திவ் படேல் 43 ரன்களும், ஹேமங் பதானி 20 ரன்களும், வாசிம் ஜாபர் 12 ரன்களும் எடுத்தனர். மற்றவீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஆட்ட நேர இறுதியில் 115 ரன்களில் சுருண்டது கிரீன். இதன்மூலம் 226 ரன்கள் வித்தியாசத்தில் டிராவிட் தலைமையிலான ப்ளூ அணி வெற்றி பெற்றது.
இன்று கங்குலி இடம் பெற்றுள்ள கிரீன் அணியும், வேணுகோபால் ராவ் தலைமையிலான ரெட் அணியும்மோதுகின்றன. இதிலும் கங்குலி சரியாக விளையாடவிட்டால் இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்புஅவருக்கு மேலும் மங்கும் ஆபத்து உள்ளது.












Click it and Unblock the Notifications