இன்று நிறைவடையும் திருப்பதி பிரம்மோத்சவம்
Subscribe to Oneindia Tamil
திருமலை:
திருமலையில் நடந்து வந்து பிரம்மோத்சவ விழா இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
கடந்த 8 நாட்களாக நடந்து வந்த பிரம்மோத்சவ விழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 9வது நாளான இன்றுவெங்கடாசலபதியின், சுதர்சன சக்கரம் கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி புஷ்கரணியில் நீராட்டப்பட்டது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியை கண்டு மலையப்பசாமியை வணங்கினர். முன்னதாக வராஹசாமிகோவிலிலிருந்து சுவாமி புஷ்கரணிக்கு மலையப்பசாமியின் விக்கிரகம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
சிலைக்கு தலைமை அர்ச்சகர் வேத மந்திரங்கள் ஓதி அபிஷேகம் செய்தார். இன்று மாலை கருட கொடிஇறக்கப்படும். மேலும் த்வஜ அவரோஹகனம் செய்யப்படும். அத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவடையும்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 9 நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் வெள்ளம் அலைமோதியது.












Click it and Unblock the Notifications