ஐநா பொது செயலாளர் தேர்தல்-தரூர் விலகல்
ஐ.நா. சபை:
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட இந்தியாவின் சசி தரூர், தனக்கு தோல்வி உறுதி என்றுதெரிய வந்ததால் அந்தப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து தென் கொரியாவின்பான்-கி-மூன் ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகிறார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னாணின் பதவிக் காலம் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. ஜனவரியில் புதியபொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்.இதையடுத்து இந்தப் பதவியைப் பிடிக்க பல நாடுகள் முயன்றன. 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்புநடத்தப்பட்ட பல சுற்று ரகசிய வாக்கெடுப்பில் தென் கொரியாவின் பான்-கி-மூனும், இந்தியாவின் சசி தரூரும்தான் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.
முதல் இரண்டு சுற்றுகளில் மூன், தரூர் ஆகியோர் இடையே வாக்கு இடைவெளி மிகக் குறைவாக இருந்தது.ஆனால், மூன்றாவது சுற்றில் மூன் மிக அதிக வாக்குகள் பெற்றார்.
இதையடுத்து போட்டியிலிருந்து விலகுவதாக தரூர் அறிவித்துவிட்டார். பொதுச் செயலாளர் தேர்தலுக்கானஅதிகாரப்பூர்வ வாக்குப் பதிவு அடுத்த வாரம் நடக்கவுள்ளது.
15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபை யாரை வேட்பாளராக இறுதி செய்கிறதோ அவரையே 192நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையும் தேர்ந்தெடுப்பது மரபாக இருந்து வருகிறது.
இதனால் தென் கொரியாவின் பான்-கி-மூன் வெல்வது உறுதியாகிவிட்டது.
இந்தப் பதவிக்கு போட்டியிட்ட சசி தரூர் மலையாளி ஆவார். அமெரிக்காவில் வளர்ந்த தரூர் ஐ.நா. பொதுச்சபையில் செய்தித் தொடர்பு பிரிவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார் தரூர்.
ஐ.நா. பொதுச் செயலாளராகப் போகும் பான்-கி-மூன் தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சராக உள்ளார்.












Click it and Unblock the Notifications