சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை:
சென்னை தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய புறநகர்ப் பகுதிகளில் உள்ள சிலபள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மாணவ, மாணவியர் பெரும்பீதியடைந்து பள்ளிகளை விட்டு வெளியேறினர்.
தாம்பரத்தில் கரோடியா இந்து வித்யாலயா என்ற மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளிக்கு இன்று காலை மன்சூர் அலிகான் என்பவர் தொலைபேசியில் பேசி,உங்களது பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நிமிடங்களில்அது வெடிக்கும் என கூறியுள்ளார்.இதையடுத்து பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிக்கு விடுமுறையைஅறிவித்த நிர்வாகம், மாணவ, மாணவியரை வீடுகளுக்கு செல்லுமாறுஅறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவியர் பீதியுடன் பள்ளிகளை விட்டுவெளியேறினர்.
போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டு மோப்ப நாய் சகிதம் வெடிகுண்டு நிபுணர்கள்விரைந்து வந்தனர். பள்ளி வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில்வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதேபோல குரோம்பேட்டையில் உள்ள விவேகனந்தா பள்ளியிலும் இன்று காலைவெடிகுண்டு புரளி கிளப்பப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள்வெளியேற்றப்பட்டனர். போலீஸார் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும்சிக்கவில்லை.
இதேபோல மேலும் சில பள்ளிகளிலும் இன்று வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டதால் புறநகர்ப் பகுதி மக்களிடையே பெரும் பீதி நிலவியது.
பெற்றோர்கள் பள்ளிகளுக்கு விரைந்து தங்களது பிள்ளைகளை வீடுகளுக்குஅழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications