வெற்றிக்காக பில்லி சூனியம்: 2 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர்:
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பில்லி சூனியம் வைத்ததாக வேட்பாளரின் மகன் உள்ளிட்ட 2பேரை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழு 11வது வார்டில், அதிமுக சார்பில் அமுதா, திமுக சார்பில்வைத்தீஸ்வரி, தேமுதிக சார்பில் ரமேஷ் உள்ளிட்ட 7 பேர் போட்டியிடுகின்றனர்.இந்த வார்டுக்கு உட்பட்ட கிளாய் ஊராட்சி பேருந்து நிலையம் அருகே 2 பேர் பள்ளம் தோண்டி நள்ளிரவில்பூஜை செய்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த ஒரு பெண் பயந்து போய் அலறி ஊரைக் கூட்டினார்.
இதையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி பள்ளம் தோண்டி பூஜை செய்து கொண்டிருந்த இருவரையும் பிடித்துவிசாரித்தனர். இருவரும் முரண்பாடாக பேசியதால் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர்.
அடியை தாங்க முடியாத இருவரும் தாங்கள் யார் என்பதை தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் பெயர் ரமேஷ்,இன்னொருவர் பெயர். சுயேச்சை வேட்பாளர் ரோஜா என்பவரின் மகன் தான் இந்த ரமேஷ், ரோஜாவின் தங்கைகணவர் தான் சுரேஷ்.
தேர்தலில் ரோஜா வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், மற்ற வேட்பாளர்களுக்கு தோல்வி கிடைக்கவேண்டும் என்றும் வேண்டி, பில்லி சூனியம் வைத்ததாக இருவரும் கிராம மக்களிடம் தெரிவித்தனர்.
இதற்காக அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பகுதியைச் சேர்ந்த குமார் என்ற மந்திரவாதியிடம் மந்திரித்தசெப்புத் தகட்டை வாங்கி வந்ததாகவும் தெரிவித்தனர். பின்னர் இருவரையும் போலீஸாரிடம் கிராம மக்கள்ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் இருவரையும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று புதைத்து வைக்கப்பட்ட செப்புத் தகடுஉள்ளிட்ட பொருட்களை தோண்டியெடுத்தனர். தலைமறைவாகி விட்ட மந்திரவாதி குமாரை போலீஸார் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications