முதல்வர் வீட்டை படம் பிடித்த இலங்கை பெண்
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் வீட்டை புகைப்படம் எடுத்த இலங்கைப் பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் பிடித்துவிசாரித்து வருகின்றனர்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு அருகே நேற்று ஒரு கார் வந்தது. காரில்இருந்தவர்களிடம் இதுதான் முதல்வரின் வீடு என கார் டிரைவர் காட்டினார்.உடனே காரில் இருந்த ஒரு பெண் வீட்டை புகைப்படம் எடுத்தார்.
இதைப் பார்த்து விட்ட முதல்வர் வீட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஓடி வந்து காரை நிறுத்தமுயன்றனர்.
போலீஸார் வருவதைப் பார்த்ததும் டிரைவர் காரை வேகமாக ஓட்டினர். ஆனால் போலீஸார் காரை துரத்தினர்.இதில் நிலை தடுமாறிய கார் பிளாட்பாரத்தில் மோதி நின்றது.
காரை முற்றுகையிட்ட போலீஸார் அதில் இருந்தவர்களை கீழே இறக்கி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள்இலங்கையைச் சேர்ந்த தர்ஷிகா, மகிந்தா, தர்மா என தெரிய வந்தது.
3 பேரும் தாங்கள் சுற்றுலா பயணிகள் என தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்த டிஜிட்டல் கேமராவைப் பறித்த போலீஸார் அதில் இருந்த சிப்பை பறிமுதல் செய்தனர்.பின்னர் 3 பேரையும் கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரிடமும் தீவிர விசாரணைநடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications