கள்ளச் சாராயம் குடித்த யானை சாவு!
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கள்ளச்சாராயத்தை சாப்பிட்ட யானைபரிதாபமாக உயிரிழந்தது.
மேட்டுப்பாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ளகிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை மற்றும் பச்சைப் பயிர்களை சாப்பிட காட்டுயானைகள் வருவது வழக்கம்.கோலம்பாளையம் அருகே காலனிப்புதூர் என்ற கிராமத்தில் இதுபோல 13 வயதுகாட்டு ஆண் யானை புகுந்து வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து சாப்பிட்டது. பின்னர்தண்ணீர் தேடி அலைந்த யானை, அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயஊறல்களை உடைத்து சாராயத்தை குடித்தது.
மேலும் சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அது சாப்பிட்டது.
இதனால் யானைக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சுருண்டு விழுந்தயானை பல மணி நேரம் துடிதுடித்தது. பின்னர் அந்த யானை உயிரிழந்தது.
சம்பவம் குறித்து அறிந்ததும் வனத்துறை டாக்டர்கள் விரைந்து வந்து யானையைபரிசோதித்தபோது கள்ளச்சாராய ஊறலை சாப்பிட்டதால்தான் யானை இறந்தது என்றுதெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications