முஷாரப் வீடு அருகே குண்டு வெடிப்பு
Subscribe to Oneindia Tamil
ராவல்பிண்டி:
பாகிஸ்தான் அதிபர் முஷாரப் வீட்டு அருகே குண்டு வெடித்தது.முஷாரப்பை கொல்ல தீவிரவாதிகள் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், அவர் தப்பி விட்டார்.
இஸ்லாமாபாத்தில் வசித்தாலும், முஷாரப் ராணுவ தளபதியாகவும் இருப்பதால் அவருக்கு ராவல்பிண்டியில் ஒருராணுவ இல்லமும் உள்ளது.
இந் நிலையில் அவரது வீட்டின் பின்புறம் இருக்கும் பூங்கா ஒன்றில் நேற்றிரவு 10 மணியளவில் ஒரு குண்டுவெடித்தது. பூங்காவில் அப்போது யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு சுற்றி வளைத்தனர். மேலும் அங்கு வெடிக்காதநிலையில் இருந்த சில குண்டுகளையும் கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications