பிரதமர் பேரன்களையும் விடாத டெங்கு!
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங்கின் இரண்டு பேரன்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லி மற்றும் வட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தமுடியாமல் சுகாதாரத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.டெங்கு காய்ச்சலுக்கு டெல்லியில் மட்டும் இதுவரை 15 பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் 37 பேர்உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் 600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டெங்குவுக்கு டெல்லிதான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெங்குவுக்கு இறந்தவர்களில் 15 பேர் டெல்லியைச்சேர்ந்தவர்கள். மற்றவர்கள் உ.பி, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இந் நிலையில் டெங்கு, பிரதமர் மன்மோகன் சிங்கின் பேரன்களையும் விடவில்லை. மன்மோகன் சிங்கின் 2வதுமகள் தமான். இவரது கணவர் அசோக் பட்நாயக். ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவர்களுக்கு ரோஹன் (வயது 11), மாதவ்(17) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரையும் டெங்கு தாக்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக இருவரும் டெல்லி அகில இந்தியமருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில்இருவருக்கும் டெங்கு காய்ச்சல் வந்துள்ளது உறுதியானது.
இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் தேறி வருவதாக டாக்டர்கள்தெரிவித்துள்ளனர். பிரதமர் இல்லம் வரை டெங்கு வந்து விட்டதால் டெல்லியில் டெங்கு பீதி மேலும்அதிகரித்துள்ளது.
பிரதமர் வீடு உள்பட டெல்லி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications