அப்சல் தூக்கு தண்டனை ஏற்பாடுகள் நிறுத்தி வைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Afzal

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவைத் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளைதிகார் சிறை நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.

நாடாளுமன்றம் மீதான தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் முகம்மது அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அவரை வருகிற 20ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இந் நிலையில் அப்சலின் மனைவி தபஸ்ஸம் தனது கணவருக்கு கருணை காட்ட வேண்டும் என்று கோரி ஜனாதிபதி கலாமிடம்விண்ணப்பித்துள்ளார். கலாமை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார்.

இந்த கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு கலாம் அனுப்பி வைத்துள்ளார். சிறை விதிகளின்படி,கருணை மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அதன் மீது குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும் வரை தூக்கிலிட முடியாது.

எனவே அப்சலை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து திகார் சிறைஅதிகாரிகள் கூறுகையில், அப்சல் குருவின் கருணை மனு குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளதாக அறிகிறோம். எனவேதூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

முன்னதாக கலாமை அப்சலின் மனைவி, தாயார் ஆயிஷா பேகம், மகன் காலிப் ஆகியோர் சந்தித்து கருணைகாட்ட வேண்டும் என்று நேரில் கோரிக்கை விடுத்தனர். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.

பின்னர் தபஸ்ஸம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் கொடுத்துள்ள கருணை மனுவை பரிசீலிப்பதாககுடியரசுத் தலைவர் உறுதி கூறினார். எனது கணவர் மன்னிக்கப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் அவருக்கு நீதி கிடைக்காத நிலையில், இந்த அமைப்பின் மீதும்(குடியரசுத் தலைவர்) அவர் நம்பிக்கையை இழந்து விட்டார். இதனால்தான் அவரே கருணை மனுவைத் தாக்கல்செய்யவில்லை.

விசாரணை பாரபட்சமாக நடந்துள்ளது, நியாயமாக நடைபெறவில்லை என்பதையும் குடியரசுத் தலைவரிடம்கூறியுள்ளோம். இந்தியாவை பெரிய ஜனநாயக நாடு என்கிறோம். ஆனால் காஷ்மீரிகளுக்கு மட்டும் நீதிகிடைப்பது இல்லை என்றார் தபஸ்ஸம்.

அதுகுறித்து விரிவாக சொல்லுங்கள் என செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு மேல் பேச விரும்பவில்லைஎன்று கூறி விட்டு தபஸ்ஸம் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

அப்சலின் மகன் காலிப்பிடம், நீ எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகிறாய் என்று கலாம் கேட்டுள்ளார்.அதற்கு காலிப், தான் டாக்டராக விரும்புவதாகவும், ஆனால் அதற்கு தனது தந்தை உயிருடன் இருந்தால்தான்முடியும் என்றும் கூறியதாக அப்சலின் வழக்கறிஞர் நந்திதா ஹக்ஸர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+