பொருளாதார மண்டலம் தேவையில்லை-ராமதாஸ்
திண்டுக்கல்:
தமிழ்நாட்டில் பொருளாதார மண்டலங்கள் (SEZ- Special economic zones) அமைப்பது தேவையற்றது என பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நாடாளுமன்றம், சட்டமன்றம் இவைகளை விட அதிக சக்தி வாய்ந்தது உள்ளாட்சி அமைப்புகள் தான். இவைதான்மக்களோடு நேரடி தொடர்பு வைத்திருப்பவை. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒருலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பதவி வகிக்கிறார்கள். எனவே உள்ளாட்சி அமைப்புகலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும்.
குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் மாநில அரசுக்கு இணக்கமானவர்கள் பதவியில் இருந்தால் அதிக நிதிபெற்று கூடுதல் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும். அதன்படி இப்போது உள்ள அரசுக்கு ஆதரவாக திமுககூட்டணி வேட்பாளர்கள் பதவிக்கு வர வேண்டும்.
தமிழ் நாட்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பது தேவையற்றது. இதற்காக விவசாயிகளின் நிலம்மொத்தமாக கையகப்படுத்தப்பட்டு பெரும் பணக்காரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நவீனநிலப்பிரபுகள் தோன்றுகிறார்கள். எனவே இது நமக்கு தேவை இல்லை.
இதற்கு பதிலாக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிப்காட்டில் மூடிக் கிடக்கும் ஆலைகளையும், அங்குள்ளநிலங்களையும் ஒதுக்கலாம் என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications